Main Menu

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

பகிரவும்...