Main Menu

யாழ்.மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது- அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ். மக்களுக்கு 940 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த உதவியானது அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியுதவி மற்றும் உலர் உணவுப் பொருட்களும் உள்ளடங்குவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 820 மில்லியன் ரூபாய் நிதியானது 448 சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பங்கள் உள்ளடங்கலாக ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 975 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைவிட, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 24 மெற்றிக் தொன் கோதுமை மாவினை 11 ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பகிரவும்...