“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)
புனிதப்பணி செய்த
புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின்
பிறந்த நாளே செவிலியர் தினமாகி
சேவை போற்றும் நாளாகி
உலக செவிலியர் தினமாகியதே
இன்றைய நாள் 200 வது பிறந்தநாளாகிறது
விளக்கேந்திய பெருமாட்டியை நினைவில்
கொள்வோம் நாமும் !
வெள்ளைப் புறாக்களென
கொள்ளை அன்போடு
சேவை செய்திடும் தேவதைகள்
மருத்துவருக்கும் மேலாக
மகத்தான சேவை செய்யும்
மனிதப் பிறவிகள் செவிலியர்கள் !
அருவருப்பு ஏதுமின்றி
அர்ப்பணிப்போடு பணி செய்து
பரபரப்போடு வலம் வரும் பணியாளர்களே
கருணையின் ஜீவநதியானவர் நீவிர்
காருண்ணிய சீலர்கள் நீவிர்
உங்கள் பணிக்கு நன்றி நன்றி !
உயிர்நலம் காக்கும் தியாகப்பணி
உடல்நலம் பேணும் அறப்பணி
உயிரிலும் மேலான உம் தவப்பணி
உன்னதமான சேவைப்பணி
உலகினில் நிகரில்லை எப்பணிக்கும் !
அவசரகால வேளையிலும்
ஆபத்தான நேரத்திலும்
கொரோணாத் தொற்றிலும்
பிறர் நலன் பேணி
தூய பணி செய்யும் தூயவர்களே
உம் சேவைக்கு நன்றி !
உங்கள் கைகளில் தானே
எம் ஜனனம் ஆரம்பம்
அன்னை அணைக்க முன்பே
அன்புக் கரத்தால் எடுத்து
அன்னையிடம் கொடுத்து
அன்பால் அணைத்த செவிலியரே
எம் செவிலித்தாய் நீவீர் தானே
உங்கள் பணிக்கு நன்றி நன்றி !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 12/05/2020