Main Menu

பேராயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை (இரங்கல்கவி)

மன்னார் மறைமாவட்ட ஆயர்
இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு
ஒட்டு மொத்த தமிழினத்திற்கும்
ஒரு பேரிழப்பே
மக்களின் உரிமைக் குரலாக
மக்களின் பிரதிநிதியாக
மக்களுக்காகவே வாழ்ந்த
பேராயரை இழந்து தவிக்கிறதே
தமிழ்கூறும் நல்லுலகம் !

இனமத மொழி கடந்து
மக்களின் நலனுக்காய்
பாரபட்சமின்றி பணியாற்றி
இன அழிப்பிற்கு நீதி கோரி
சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்த
ஆண்டகையை நினைவிற் கொள்கிறோம் !

தமிழ்த் தேசீயம்
சிறந்த வழிகாட்டியை இழந்து
தவிக்கிறதே இன்று
அடக்குமுறைக்கு எதிராக
ஓங்கிக் குரல் கொடுத்து
இனப்படுகொலையின் சாட்சியமாய் வாழ்ந்த
ஆண்டகை மறைந்தார் என்ற செய்தி
மனதை நெருட வைக்கிறதே !

மக்களின் நீதிமான்
மனிதநேயப் பண்பாளன்
கடவுளின் சாட்சி
கருணையின் ஊற்று
இரக்கத்தின் காவலன்
இனத்தின் விருட்சம்
இன்று எம்மை விட்டுப் பிரிந்த்ததே !

தமிழர் தேசத்திற்கும்
தமிழ்த் தேசீயத்திற்கும்
ஓங்கிக் குரல் கொடுத்த
ஆண்டகையின் இழப்பு
அளவிட முடியாத பேரிழப்பே
ஆண்டகையின் ஆத்மா சாந்தியடையட்டும் !

பகிரவும்...