Main Menu

“பெண்ணின் மகிமை” (சர்வதேச பெண்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)

பெண்ணின் மகிமையோ
மண்ணுக்கும் விண்ணுக்கும் பெருமை
மானிடத்தின் வேராக
மனுக்குலத்தின் தேராக
பிரபஞ்சத்தின் பிரம்மாவாக
பெண் எனும் பெரும் சக்தி
மண்ணிலே மலர்ந்தது !

அர்ப்பணிப்பை வாழ்வாக்கி
ஆற்றல்களை ஆழுமையாக்கி
அன்பைக் காணிக்கையாக்கி
உணர்வைக் கலவையாக்கி
உயிரைப் பணயமாக்கி
உயிருக்குள் உயிரைச் சுமப்பவள் பெண் !

நாட்டை வீட்டை சமூகத்தை
நல்ல முறையில் கட்டிக் காத்து
தேவதையின் அம்சமாய்
தேவைகளின் தாயாய்
பொறுமையின் சிகரமாய்
பொங்கினால் கடலாய்
பரிமாணங்கள் கொண்டவள் பெண் !

காதலாய் நட்பாய்
தாயாய் தாதியாய்
பெண் எனும் பெரும்சக்தி
மண்ணிலும் விண்ணிலும்
மகத்தான சாதனைகள் படைத்து
மகிமை பெறுகின்றனரே !

மண்ணுலகின் மங்கையே
விண்ணுலகின் தாரகையே
பூவையே புயலாகச் செயற்படு
புறம்பேசி இகழ்வோர் முன்
பூகம்பமாய் மாறிவிடு !

நீ கால் பதிக்காத துறையென்று
இதுவரை எதுவுமில்லை
ஆட்சியில் அதிகாரத்தில்
வழக்காடுமன்றத்தில் விண்வெளியிலென
சாதனைகள் பலசெய்து
சரித்திரங்கள் பல படைத்து
வரலாற்றில் தடம் பதிக்கிறாய் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...