Main Menu

இலங்கையின் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள்!

ஈழத்தமிழரைக்
கொன்றால் என்ன
இந்தியா நமது தேசம்தான்!!

இலங்கைக்குத் துணையாய்
நின்றால் என்ன
இந்தியா நமது தேசம்தான்!!

“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”!

பாரதி சொன்னதை
மறக்காதே – என்ன
பாதகம் செய்தாலும்
வெறுக்காதே!

இராசபக் சேவுக்கு
இரத்தினக் கம்பளம்
விரித்தால் என்ன விரிக்கட்டும்! – தமிழ்
இனத்தைக் கொன்று
குவித்ததை நினைத்து
சிரித்தால் என்ன சிரிக்கட்டும்!
இலங்கையைக் காக்க
ஐ.நா. சபையில்
துடித்தால் என்ன துடிக்கட்டும்! – இன்னும்
எஞ்சிய பேர்களை
முழுதுமாய்க் கொன்று
முடித்தால் என்ன முடிக்கட்டும்!

பாரத நாடு பழம்பெரும் நாடு!
நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்

ஜெனீவா நகரில்
தமிழர்கள் பேரணி
நடத்தினால் என்ன நடத்தட்டும்! – இந்த
ஜெகம்முழு துக்கும்
உண்மை தனைவெளிப்
படுத்தினால் என்ன படுத்தட்டும்!
பலப்பல நாடுகள்
நமக்கா தரவு
கொடுத்தால் என்ன கொடுக்கட்டும்! – இந்த
பாரததேசம்
திட்டமிட் டே நமைக்
கெடுத்தால் என்ன கெடுக்கட்டும்!

பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்!

குற்ற வாளியே
நீதி விசாரணை
செய்தால் என்ன செய்யட்டும்! – படு
கொலைசெய்ய மீண்டும்
குண்டு மாரிதான்
பெய்தால் என்ன பெய்யட்டும்!
அன்றுபோல் மீண்டும்
இந்தியா தமிழரைக்
கொன்றால் என்ன கொல்லட்டும்! – அட
அதுதான் அரச
தருமம் என்று
சொன்னால் என்ன சொல்லட்டும்!

பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்

இந்தியா போர்வையில் வாழும் தமிழ்நாட்டு இந்தியனே
நாளை உமக்கும் எங்கள் நிலையே!

-புலவர் புலமை பித்தன்

பகிரவும்...