Main Menu

“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)

அவனியைக் காட்டியவள் அன்னை
சான்றோர் ஆக்கியவர் தந்தை
எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்து
மண்ணும் விண்ணும் போற்றும் வண்ணம்
நல் மனிதராக்கியவர் ஆசான்களே
சமுதாயத்தின் அச்சாணியான ஆசான்களே
உங்கள் சேவைக்கு நன்றி நன்றி !

அறிவிற்கு ஒளியாகி
ஆற்றலைத் தூண்டி
உயரத்தில் எமையேற்றி
உவகை கொண்ட ஆசான்களே
நல்லதைச் சொல்லி
நயம்பட உரைத்து
நாம் வளமாய் வாழ
வழிகாட்டிய ஆசான்களே
வாழ்த்துகிறோம் உம்மை !

அறிவைச் செதுக்கி
அக இருளை அகற்றி
அறியாமையைப் போக்கி
ஆழுமையை விதைத்து
எமைச் செதுக்கிய சிற்பிகளே
உங்கள் சேவைக்கு நன்றி நன்றி !

நன்னெறி புகட்டி
நல்வழி காட்டி
நானிலம் போற்ற
நற்றமிழோடு வாழ
வழிகாட்டிய நல்லாசான்களே
நவில்கின்றோம் நன்றியுமக்கு !

உங்கள் வழியில் வழிகாட்டலில்
தொடர்கிறேன் நானும் பணியோடு
புலத்து வாழ்வில் புலத்து மொழியில்
பல்லினச் சிறுவரோடு
மாற்றுக் கருத்துக்களின்றி
தொடர்கிறேன் நானும் தூய பணியோடு !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 05.10.2020

பகிரவும்...