Day: October 5, 2020
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் கொரோனா தொற்று நோயாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர். பரிசோதனையின் எண்ணிக்கையைமேலும் படிக்க...
நாட்டில் இன்று மட்டும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 83 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனாமேலும் படிக்க...
நாளை மறுதினம் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து அ.தி.மு.க.வின் சில மூத்த அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டமன்றமேலும் படிக்க...
பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய
பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஒரே நேரத்தில் பாகிஸ்தான், சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டாலும் இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் – இந்திய விமானப்படை தளபதி
ஒரே நேரத்தில் பாகிஸ்தான், சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டாலும் இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் என்றும் தளபதி பகாதாரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து, நமது படைகளும் எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலைக்கு வந்துள்ளன என்றார். தாக்கும்மேலும் படிக்க...
பிரான்ஸிலிருந்து பிரிந்து செல்வதை நியூ கலிடோனியா மக்கள் நிராகரித்தனர்!
தென் பசிபிக் தீவுக்கூட்டங்களான நியூ கலிடோனியாவில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரான்சிலிருந்து பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிந்த செல்ல விருப்பம் இல்லையென 53.26% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தீவுக்கூட்டத்தின் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பிரான்ஸிலிருந்த பிரிந்தமேலும் படிக்க...
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: திமுக எம்.பி. கனிமொழி கைதாகி விடுதலை
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படிக்க...
நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்
நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கம்பஹா – திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுமேலும் படிக்க...
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் மொத்தமாக 103 பேருக்குமேலும் படிக்க...
யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப் படுத்தலில்!
கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள்மேலும் படிக்க...
“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)
அவனியைக் காட்டியவள் அன்னை சான்றோர் ஆக்கியவர் தந்தை எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்து மண்ணும் விண்ணும் போற்றும் வண்ணம் நல் மனிதராக்கியவர் ஆசான்களே சமுதாயத்தின் அச்சாணியான ஆசான்களே உங்கள் சேவைக்கு நன்றி நன்றி ! அறிவிற்கு ஒளியாகி ஆற்றலைத் தூண்டி உயரத்தில்மேலும் படிக்க...
முதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)
ஐப்பசித் திங்கள் முதலாம் நாளை ஐ.நா சபையும்அறிவித்து மகிழுது சர்வதேச முதியோர் தினமாக முதியோர் நலன் பேணவும் மூத்தோரைப் போற்றவும் முத்தாப்பாய் தந்ததே ஐ.நா வும் ! மூத்த குடிகளை மதித்து ஆற்றிய பணிகளை நினைவூட்டி அடிப்படைச் சுதந்திரங்களை வழங்கி மூத்தோரின்மேலும் படிக்க...
எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன
எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கைரோவில் (Cairo) உள்ள சக்காரா (Saqqara) எனும் கல்லறையில் 59 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 12 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த மரச் சவப்பெட்டிகள், சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
நல்ல முட்டை, பழுதடைந்த முட்டை கண்டறிய 5 சுலபமான வழிகள்
நம்மில் பலரும் சமைப்பதற்காக முட்டை ஒன்றைக் குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கும்போது அதை எப்போது வாங்கினோம், கெட்டுப் போய்விட்டதா என்று குழப்பம் அடைந்திருப்போம். காலாவதியான முட்டையா? முட்டைப் பெட்டியில் குறிப்பிட்டுள்ள தேதியைப் பார்த்துக் கண்டுபிடிக்கலாம். சில நாடுகளிலிருந்து வரும் முட்டைகளின் மேல் காலாவதித்மேலும் படிக்க...
Disney ஊழியர்கள் பணிநீக்கம் – புளோரிடாவில் கால்வாசிப் பேருக்குப் பாதிப்பு
Disney நிறுவனத்தின் பூங்கா பிரிவு தனது ஊழியர்களில் 28,000 பேரைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வேலை செய்யும் கால்வாசிப்பேர் அதனால் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. சென்ற வாரம், அம்மாநில, உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிறுவனம் அதுமேலும் படிக்க...
பதவி போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை!
புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர், நேற்றிரவு 11 மணியவில் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம்மேலும் படிக்க...
12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வாக்கிங் சென்ற இளைஞர்
பிரிக்டான் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது, அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலைபோல அணிந்து கொண்டு சென்றதால் அவருக்கு அருகில் சென்றவர் அச்சமடைந்தனர். அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது, அச்சமடைந்த கடைக்காரர்,மேலும் படிக்க...