பிரித்தானியா
சர்வதேச பயணிகள் சுயமாக தனிமைப் படுத்தத் தவறினால் 1,000 பவுண்டுகள் அபராதம்?
பிரித்தானியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள், தங்களை 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உட்துறை செயலாளர் பிரிதி படேல், ‘டவுனிங் ஸ்ட்ரீட் கொரோனா வைரஸ்’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை!
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன்மேலும் படிக்க...
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ்மேலும் படிக்க...
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!
சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால்மேலும் படிக்க...
கொரோனாவிற்கான தடுப்பூசியின் மனிதச் சோதனைகள், வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Matt Hancock) அறிவித்துள்ளார். தினசரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹான்கொக், (Matt Hancock)மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பணிக்குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான 21 ஆராய்ச்சி திட்டங்கள், பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 14 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலால் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தடை
பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணி தனது பிறந்தநாளுக்கு வழங்கப்படும் துப்பாக்கி வேட்டு மரியாதையினை இவ்வருடம் நிகழ்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணியின் 94ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மகாராணி எலிசபெத்தின்மேலும் படிக்க...
NHSற்கு “எனது உயிரால் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்” பிரிட்டன் பிரதமர்
தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கொரொனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்தமைக்காக, தேசிய சுகாதார சேவைகளுக்குத் தனது உயிரால் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக பொரிஸ்மேலும் படிக்க...
பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை
பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்குமேலும் படிக்க...
கொரோனா – இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரிட்டன்– ஒரு நாளில் 953 மரணங்கள்
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்து 8,931 ஆக உயர்ந்துள்ளது. இது மற்றொரு கடுமையான நாள் எனவும் இதுவே மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து,மேலும் படிக்க...
கொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிக பட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.
பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து மருத்துவமனைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில்மேலும் படிக்க...
‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!
நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம்: 6 மாதங்களுக்கு முடக்க தயராகும் பிரிட்டன்
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக பரவிவரும் நிலையில் பிரித்தானியாவை 06 மாதங்கள் முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை அங்கு இதுவரை 41 ஆயிரத்திற்கும்மேலும் படிக்க...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!
இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகமேலும் படிக்க...
இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 25,150 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,829 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் இது 27% அதிகரிப்பு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸினால்மேலும் படிக்க...
உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்!
உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த 108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 5மேலும் படிக்க...
பிரிட்டனில் மோப்ப நாய்களைக் கொண்டு கிருமித்தொற்றை அடையாளம் காணும் முயற்சி
நாய்கள் மோப்பத் திறனுக்குப் பெயர்பெற்றவை. காவல்துறை, சுங்கத்துறை எனப் பல துறைகளின் அதிகாரிகளுக்குக் குற்றங்களைக் கண்டறியும் பணியில் அந்தத் திறன் பெரிதும் பயன்படுவது நாம் அறிந்ததே. இப்போது அதனைப் பயன்படுத்தி, COVID-19 கிருமித்தொற்றைக் கண்டறிய முயற்சி செய்கிறது, பிரிட்டனில் செயல்படும் அறநிறுவம்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!
கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு கொரோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 16
- மேலும் படிக்க