Main Menu

கொரோனாவிற்கான தடுப்பூசியின் மனிதச் சோதனைகள், வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட்  ஹான்கொக் (Matt Hancock) அறிவித்துள்ளார்.

தினசரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹான்கொக், (Matt Hancock) ஒக்ஸ்போர்ட் குழுவினருக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க 20 மில்லியன் பவுண்ட்  வழங்குவதாகவும், மேலும் 22.5 மில்லியன் பவுண்ட் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின்  ஆராய்ச்சிக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...