Main Menu

கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பணிக்குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.

கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான 21 ஆராய்ச்சி திட்டங்கள், பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக 14 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மருந்தின் மாதிரிகள் லட்சக்கணக்கில் தயார் நிலையில் உள்ளன.

இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெறும் நிலையில், மருந்து கண்டுபிடிப்பு, சோதனை வெற்றி ஆகியவை நிறைவடைந்ததும், அவை உடனடியாக பொதுமக்களை சென்றடைவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை அறிவியல் ஆலோசகர் atrick Vallance, துணை தலைமை மருத்துவ அதிகாரி துழயெவாயn எயn வுயஅ தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...