இலங்கை
வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்களின் விபரங்களை திரட்டுமாறு பணிப்பு
இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பு
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் அமைச்சர் பந்துல குணவர்தன் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன் அவர்கள் இத்தாலியில்மேலும் படிக்க...
தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்: கொரோனா குறித்து தீவிர நடவடிக்கை – சார்க் தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை
கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காணொளி மூலமாக இடம்பெற்றது. இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்தனை
கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது. ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பாதிப்பு: தேர்தல் பிற்போடப்படுமா? தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகரித்துள்ளதால் நாடு எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் நிலவும் நிலையில் அதனைமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை- வர்த்தக சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் தங்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மக்களுக்கான அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய நிலைவரப்படி 10 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்து மக்கள் முடிந்தளவு அதிக கூட்டமாக கோயில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்துமேலும் படிக்க...
திங்கட்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
இரண்டு வாரங்கள் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிப்பு
இன்று (14) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதற்கானமேலும் படிக்க...
யாழ் வைத்தியசாலையில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்மேலும் படிக்க...
பிரதமர் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் தேவையற்றமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள்
ஐரோப்பியர்களுக்கு வீசா விநியோகம் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில்.. பொதுமக்கள் போக்குவரத்து சேவை, கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கை.… வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு… கொரோனா தடுப்பு செயலணிக்குமேலும் படிக்க...
வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம்-நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்!
வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா,மேலும் படிக்க...
வவுனியாவிலும் கொரோனா பரிசோதனை முகாம்: இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா?- செல்வம் எம்.பி.
வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகைமேலும் படிக்க...
மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரனாவுக்கான அறிகுறிகள்?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய்மேலும் படிக்க...
கொரோனா தொற்று – பல்கலைக் கழகங்களுக்கும் பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 2 வாரத்திற்கு அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும்மேலும் படிக்க...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கு தற்காலிகமாக தடைவிதிப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்கின்றார்கள். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் காரணத்தினால்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- …
- 257
- மேலும் படிக்க