Main Menu

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கு தற்காலிகமாக தடைவிதிப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் காரணத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 1989 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகின்ற நிலையில் இலங்கையிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவும் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...