Main Menu

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன் அவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இன்று மாலை ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...