Main Menu

“ தியாகத்தின் மறவன்” (திலீபனின் பிறந்தநாளுக்கான நினைவுக்கவி)

கார்கால கார்த்திகை இருபத்தி ஒன்பதில்
மாண்புமிக்க மாவீரர் மாதமதில்
பாரெல்லாம் புகழ
ஊரெழுவில் உதித்தானே பார்த்தீபன்
உன்னத தியாகத்தால் – இன்று
தியாகத்தின் மறவனாய் உலகமே போற்றுதே !

விடுதலைத் தீக்காக
பசித்தீயை ஒறுத்தான்
பட்டினியாய் கிடந்தான்
பன்னிருநாள் யாகத்தில்
தன் இன்னுயிரைத் தியாகம் செய்து
தியாகத்தின் உச்சத்தையும்
வென்றானே !

தியாகத்தின் உச்சத்தை வென்றவனே
அகிம்சையின் ஆதிக்க நாயகனே
தியாகத்திற்கு வரைவிலக்கணமானவனே
தியாகத்திற்கு புது வேதம் எழுதியவனே
மகா யாகத்தின் வேள்வியையும்
மிஞ்சியதே உன் தியாகம் !

மக்கள் புரட்சிக்கு வித்திட்ட
தியாகத்தின் மறவனே
பன்னிருநாள் யாகத்தில்
உன் தியாகம் வென்றதுவே
மகா யாகத்திலும்
உன்னதமானது உன் தியாகமே
உன் கனவும் பலிக்கட்டும்
உன் இலட்சியமும் நிறைவேறட்டும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 29 .11.2018

பகிரவும்...