Main Menu

தைத் திருநாளுக்கான சிறப்புக்கவி

இன்று தமிழர் திருநாள் தைத்திருநாள்
உவகை பொங்கும்
உழவர் பெருநாள் உன்னத திருநாள்
ஆதவனுக்கு நன்றி செலுத்தும்
அரியதோர் நாள்
ஆனந்தப் பெருநாள் !

அறுவடை செய்த நெல்லை
குற்றியெடுத்து பாலும் சக்கரையும்
பாகும் பருப்பும் சேர்த்து
பொங்கல் செய்து கட்டிக் கரும்போடு
உதயத்து ஆதவனுக்கு
உன்னதமாய் படையலிடும் நாள் !

களைப்பு நீங்கி களிப்போடு
கதிரவனை வணங்கிடும் நாள்
கை கூப்பித் தொழுதிடும் நாள்
பொங்கல் திருநாள்
வீரத் தமிழர் பெருநாள்
வெற்றிகள் குவியும் ஓர்நாள் !

கவலைகள் மறந்து
களிப்பில் மிதந்து
மனங்கள் மகிழ்ந்து
மங்கலம் பாடி
மகிழ்ச்சியில் திளைத்திடும்
பொங்கல் திருநாள் !

தைத் திருநாள் தமிழர் பெருநாளில்
மங்கலம் எங்கும் ஒலிக்கட்டும்
மங்காப் புகளும் கிடைக்கட்டும்
சங்கடங்கள் தீரட்டும்
சமத்துவம் மிளிரட்டும்
சந்தோச சாரல் வீசட்டும் !

பகிரவும்...