Main Menu

“ தமிழ்மறைக் காவலர் “ (கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் )

ஈழத்து தமிழ் அறிஞர்
தமிழ் இலக்கிய ஆர்வலர்
தமிழ் மறைக் காவலர்
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்
என் மண்ணின் மைந்தர்
எம்.பி கா.பொ. இரத்தினம் அவர்கள் !

காவலூரின் நாடாளுமன்ற உறுப்பினர்
காலம் அறிந்த பெருமகனார்
அரசியல் துறையின் பிரமுகர்
பொங்கு தமிழுக்கு புகழாரம் சூட
தங்கு தடையின்றித் தமிழ்ப் பணியாற்ற
பங்குனித் திங்கள் பத்தில் உதித்தாரே !

ஆசிரியர் கலாசாலையில் படித்து
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று
ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகி
மலேசியத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
தனிநாயகம் அடிகளோடு இணைந்து
தமிழ்ப்பணியும் ஆற்றினாரே !

திருக்குறள் நெறி பரவ
தீப்பொறியாய் செயற்பட்ட மானிடன்
திருக்குறள் மகா நாட்டினை
திறனோடு முதலில் நடாத்திய தீரர்
தமிழ்த் தாய்க்கு பெருமை சேர்க்க
தமிழ் நூல்கள் பல யாத்த வல்லாளர்
தமிழ்ப்பணி ஆற்றினாரே விருப்போடு !

தமிழ்மறைக் காவலரை
தமிழ் பேராசானை
திருக்குறள் செல்வரை
குறள் ஆய்வுச் செம்மலை
என் மண்ணின் மைந்தரை
பங்குனித் திங்களில் நினைத்திடுவோம் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...