Main Menu

சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)

ஊரெழு பெற்ற மைந்தன்
பார் புகழப் பிறந்த வீரன்
தேரோடும் வீதியிலே
கோரிக்கைகள் ஐந்தினை வைத்து
போராடினாரே அகிம்சையோடு !

ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி
அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய்
துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து
தியாக வேள்வியில் ஆகுதியாகி
துயில் கொண்டாரே நிரந்தரமாக !

விடுதலைத் தீ நெஞ்சினிலே
சுவாலை விட்டு எரிந்ததனால்
வயிற்றுப் பசியினை ஒறுத்து
மகத்தான தியாகம் செய்தாரே
மகிழ்வோடு ஏற்றுக் கொண்டாரே சாவினையும் !

தியாக தீபமே திலீபன் அண்ணா
நீவிர் ஊரெழுவில் பிறந்ததினால்
ஊரே பெருமை பெற்றது
நீவிர் தேரடியில் துயில் கொண்டதாலே
நல்லூரானும் பெருமை பெற்றானே !

பகிரவும்...