Main Menu

“ இயற்கையைப் போற்றும் இனிய பொங்கல் “(தைப்பொங்கல் தினத்திற்கான சிறப்புக்கவி )

ஆதவனுக்கு நன்றி சொல்லி
ஆவினங்களைப் போற்றி
புத்தரிசிப் பொங்கலிட்டு
தித்திக்கும் கரும்போடு
இயற்கை அன்னைக்கு
இன்முகத்தோடு படையலிட்டு
அயலவர்களுக்கும் கொடுத்து
உண்டு மகிழும் இனிய பொங்கல் !

தரணி போற்றும்
தமிழர் திருநாள்
தைப்பொங்கல் திருநாள்
மரபு சார்ந்த பெருநாள்
இயற்கையைப் போற்றும்
இனிய பொங்கல் திருநாள் !

பழமையைப் போற்றி
பாரம்பரியத்தைக் காத்து
மரபோடு கொண்டாடும்
மகிழ்வான திருநாள்
மங்கலப் பொங்கல் நாள் !

வியர்வை சிந்தி உழைக்கும்
விவசாயிகளுக்கு நன்றி பகிர்ந்து
உணவு தந்து எமை வாழவைக்கும்
உழவர் பெருமக்களைப் போற்றி
நன்றி பகிரும் நன்நாள்
இயற்கையைப் போற்றும்
இனிய பொங்கல் திருநாள் !

இனிய பொங்கல் திருநாளில்
உழைப்பின் பலன் பெருகட்டும்
உள்ளங்கள் பொங்கட்டும்
உணர்வுகள் பொங்கட்டும்
பொங்கு தமிழாக
எங்கும் பொங்கி வழியட்டும்
உறவுகள் மகிழட்டும்
பொங்கட்டும் பொங்கல் !

கவியாக்கம்……….ரஜனி அன்ரன் (B.A) 14.01.2021

பகிரவும்...