Main Menu

அன்பும் காதலும்…

உயிர் ஜனிக்கையிலே..
அன்பும் ஜனிக்கிறது…
உயிரின் முதல் அன்பு…
அன்னையிடம்!

அன்பு..
ஆழ்மனதின் அணையா விளக்கு…
அன்னை, தந்தை, அக்கம் பக்கத்தார் என..
அனைவர்க்கும் பொதுவான ஓர் உணர்வு…

இனங்கள் மாறுகின்ற தருணம்…
இனம் புரியா ஓர் உணர்வு…
காதல்!
இது விழிகள் வீசுகின்ற வலை…
வீரரையும் வீழ்த்திடும் கலை…
விளையும் பயிர்களுக்கு…
விளங்கா புதிர்!

காதல் மரிப்பதுண்டு…
காதலை உயிர்ப்பித்திருக்க..
காதலர்கள் மரிக்கிறார்கள்…
ஆனால் …
அன்பு மரிப்பதில்லை…
அன்புக்காய் யாரும் மரிப்பதில்லை….

ஆம்..
அன்பும் காதலும் வேறுதான்…
காதல் கண்களில் மட்டுமே நிறைந்திருக்கும்…
அன்பு இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும்!

 

-காயத்ரி பாலாஜி

பகிரவும்...