Main Menu

அடுத்தது…என்ன? ( 16.04.2020)

எம்மைத் துரத்தும் நிரந்தரக் கேள்வி
எத்தனை நாட்கள் தான் முடக்கம்?
எப்படித் தான் வீட்டுக்குள் அடக்கம்?
அடுத்த தீர்வு தான் என்ன?
அரசு எடுக்கும் முடிவு தான் என்ன?
ஆதங்கத்தோடு நாமும் எதிர்பார்த்தபடி !

மூன்றாம் உலக யுத்தமொன்று
நித்தமுமாய் தொடருது
சத்தமின்றியே நடக்குது வைரஸ்சால்
மொத்த உலகும் மெளனித்திருக்க
சித்தப் பிரமை தொடர்ந்து கொள்ள
செய்வதறியாது அரசும் தவிக்க
அடுத்தது என்ன அங்கலாய்ப்போடு நாமும் !

கண்ணுக்கு தெரியாத
நுண்ணிய கிருமியொன்று
வல்லரசுகளையே வளைச்சுப் போட்டு
வல்லமையாளர்களைப் புரட்டியே விட்டு
அண்டத்தையே ஆட்டிப் படைத்து
கணக்கு வழக்கின்றி காவு கொள்ளுது
முற்றுப்புள்ளி இன்றியே தொடருது !

மாதமொன்றும் கடந்து விட்டது
மாறுதல் ஏதும் தெரியவில்லை
ஆறுதல் சொல்லவும் யாருமில்லை
மாற்று வழியொன்று வந்து விடுமென்று
தேற்றிக் கொள்கிறோம் நம்மை நாமே !

அடுத்தது……..என்ன?
அவலத்தில் நாமும்
பேணுவோம் சமூக இடைவெளியை
வாழுவோம் ஒற்றுமையாக
கடைப்பிடிப்போம் சிக்கனத்தை
பேணுவோம் சுத்தம் சுகாதாரத்தை
நல்லதே நடக்கட்டும் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் ((B.A)

பகிரவும்...