Main Menu

அகிம்சையின் மைந்தனே “! (நினைவுக்கவி)

அகிம்சையின் மைந்தனே
தியாகத்தின் செம்மலே
வேரோடு விழுதுகளைக் காக்க
பசியை மறந்தாய்
பட்டினியைத் தாங்கினாய்
உன்னையே ஒறுத்தாய்
எமக்காய் உருகினாய் !

பைந்தமிழ் வீரம் காக்க
ஐந்தம்சக் கோரிக்கையை
காணிக்கை ஆக்கி
தாகத்தை பசியை வெறுத்தாய்
தியாகத்தைப் புரிந்தாய்
யாகத்தில் வெந்தாய் !

அண்ணல் காந்தியையும் விஞ்சி
அகிம்சையில் உச்சம் கண்ட அண்ணலே
தமிழ் வாழ எம் இனம் வாழ
உனை உருக்கி தந்தாயே ஒளியை
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மறவனே
மகா யாகத்தையும் விஞ்சியதே
உன் தியாகப் பயணம் !

யாகத்திற்கு இலக்கணமானவனே
தியாகத்திற்கு புது வேதம் படைத்தவனே
வரலாற்றிற்கு வரலாறு படைத்தவனே
அகிம்சையின் அண்ணலே
உன் தியாகத்திற்கு
ஈடு இணை இல்லை ஐயா !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...