பிரான்ஸ்
மே மாதத்திலிருந்து உணவகம் அருந்தகம் அனைத்தும் திறக்கப்படும் – ஜனாதிபதி –
மே மாத நடுப்பகுதியிலிருந்து, நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதலில் மே மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன திறக்கப்படும். அதன் பின்னர் உணவகங்கள், மதுச்சாலைகள், அருந்தகங்கள் (Bars, Restaurants)மேலும் படிக்க...
பாடசாலைகளின் விடுமுறைகளும் இணைய வழிப் பாடங்களும்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது, ஏப்ரல் 2ம் திகதி மாலையுடன் பிரான்சில் அனைத்துப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட 4 வாரங்களிற்கு மூடப்படுகின்றன. முதலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால்) 6ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரை, அனைத்து மாணவர்களிற்கும் இணையவழிக் கல்வி (coursமேலும் படிக்க...
பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்
பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாத் தொற்றினால் ஒவ்வொரு, வகுப்புகளாக, ஒவ்வொரு பாடசாலைகளாகமேலும் படிக்க...
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!
கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப்மேலும் படிக்க...
பிரான்ஸில் இராணுவ வீரர்கள்- தீயணைப்பு படையினருக்கு மேலதிகமாக சிறப்பு கொவிட் தடுப்பூசி நிலையங்கள்!
இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோருக்கு தடுப்பூசிகளை விரைவாக போட்டுக்கொள்ளும்மேலும் படிக்க...
இல்-து-பிரான்ஸ் – பாடசாலைகளிற்கு முன்னதாகவே விடுமுறை விடுங்கள் – இல்-து-பிரான்ஸ் தலைவர்
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலையில், பாடசாலைகளின் விடுமுறையை 15 நாட்களிற்கு முன்னதாகவே விடுவதற்கான கோரிக்கையை, இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) விடுத்துள்ளார். ஏப்ரல் 17ம் திகதி விட இருக்கும், வசந்தகால விடுறையை 15 நாட்களிற்கு முன்னதாக, ஏப்ரல்மேலும் படிக்க...
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒரு மாதகால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் அமுல்!
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுமையான அனுமதி, நிபந்தனைகளுடன்மேலும் படிக்க...
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தபடவுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புமேலும் படிக்க...
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தடை செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்!
பிரான்ஸில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துதெரிவித்த பிரதமர், ‘எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை. இதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராஸெனகாமேலும் படிக்க...
பிரான்ஸில் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று – 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
பிரான்ஸில் புதிய கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 30,000 ஐ நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் முதல் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்தது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தமேலும் படிக்க...
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் மிக தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸில் பிரித்தானிய பிரிவு வைரஸ் 64 சதவீதமாக உள்ளது. இதனால், அடுத்து வரும் வாரங்களில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளமேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு பிரான்ஸ் பொறுப்பேற்காது: எலிசே மாளிகை
பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அவரின் இந்த கருத்துக்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனாத் தடுப்பூசிக்மேலும் படிக்க...
ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்!
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியேர் டசால்ட் மறைவு மிகப்மேலும் படிக்க...
அகதிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குழு ஒன்று கைது
ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று Yvelines மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை கடத்தி வந்தனர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் இவ்வார ஆரம்பித்தில் இந்த குழுவை கைதுமேலும் படிக்க...
மார்செய் – யூதப்பாடசாலை – யூத வெதுப்பகம் மீது தாக்குதல் முயற்சி
நேற்று காலை மார்செய் நகரத்திலுள்ள யூதப்பாடசாலை அருகில் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய இந்த நபர், ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூதப் பாடசாலையுடன், அதனருகில் உள்ளமேலும் படிக்க...
பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி!
பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்தும் பணியை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. பிரான்ஸின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé) இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மற்றையமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் சிக்கிய பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரியமேலும் படிக்க...
100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! – காவல் துறையினர் மீது கல்வீச்சு
இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக பார ஊர்தி சாரதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியில்மேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்!
பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 32
- மேலும் படிக்க