Main Menu

அகதிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குழு ஒன்று கைது

ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று Yvelines மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை கடத்தி வந்தனர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் இவ்வார ஆரம்பித்தில் இந்த குழுவை கைது செய்தனர்.  இவர்கள் Yvelines மாவட்டத்தை மையமாக வைத்து இயங்கி வந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்து, இவ்வார செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆட்கடத்தலுக்காக ஒருவருக்கு €1.500 யூரோவில் இருந்து €3.000 யூரோக்கள் வரை கட்டணமாக வசூலித்திருந்ததாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

பகிரவும்...