இலங்கை
7ஆவது நாளாக தொடரும் போராட்டம் – அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என போராட்டக் காரர்கள் கவலை!
கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தம்மை, அரச கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் எவரும் நேரில் சந்திக்க வரவில்லை என வட.மாகாண சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்மேலும் படிக்க...
தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
முழு அதிகாரமும் அடங்கிய 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் குறித்து பேச்சு – சுரேஷ்
காணி, பொலிஸ் என அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டதான 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் இன்று (சனிக்கிழமை) தமிழர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் கோட்டா – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதி விளக்கம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வில் உறுதி: தமிழ் நாட்டுடனான போக்குவரத்துகளும் விரைவில்- கோபால் பாக்லே உறுதியளிப்பு!
இலங்கையில் இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத்தான் தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்துச்மேலும் படிக்க...
சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மியன்மார் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை விவகாரம்: ஐ.நாவில் சமர்பிக்கப் பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
நீதிக்காக போராடும் தமிழ் மக்களுக்கு, ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா.மனித உரிமைச்மேலும் படிக்க...
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது- கோபால் பக்லே
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதுடன் எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல்மேலும் படிக்க...
சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்!
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
பிறந்தநாளில் கத்திக்குத்து: கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் தினமான நேற்று வீட்டில் நின்ற குடும்பஸ்தரை வீட்டு வாசலில் வைத்து 18 வயதுமேலும் படிக்க...
மனித உரிமைகளுக்காக முன்னிற்பவர்கள் துன்புறுத்தப் படக்கூடாது என வலியுறுத்து!
மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் துன்புறுத்தப்படக்கூடாது கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் இவ்வாறு கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மனிதமேலும் படிக்க...
கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு சந்தர்ப்பம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையைமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக நாடாளுமன்றில் சூடான விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விமானப்படையால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர், ஜனாதிபதிக்கு வழங்கிய சேவைகள்மேலும் படிக்க...
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
கொரோனா தொற்று சிகிச்சையின் போது தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அமைச்சர் தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில வாரங்களாகமேலும் படிக்க...
நிபந்தனைகள் இன்றி ஆயிரம் ரூபாய் வேண்டும் – தொழிலாளர்கள் தெரிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், சம்பளமேலும் படிக்க...
விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரிஷாட்
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குறித்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் மக்கள்மேலும் படிக்க...
நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து ஹிருணிகா பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றமேலும் படிக்க...
பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்கு சென்ற ஒருவர் ஹக்கீம்தான்- மஹிந்தானந்த
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் குழுவினர், கடந்த ஆட்சியில் இருந்ததவர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி செய்தனர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதிமேலும் படிக்க...
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்!
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரா.சாணக்கியன் மேலும்மேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்து பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவின் தலைவர்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- …
- 256
- மேலும் படிக்க