இலங்கை
ஒரு மாதத்திற்குள் தீர்வு – உறவுகளிடம் உறுதியளித்தார் டக்ளஸ்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமற்போனோரின் உறவினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில்மேலும் படிக்க...
தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!
‘தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்’ என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு, பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம்மேலும் படிக்க...
கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச பொறுப்புக் கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து!
இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் பிரதிநிதியுமான டெபோரா ரோஸ் (Deborah Ross) அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்குமேலும் படிக்க...
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...
வவுனியா வர்த்தகர்களுக்கு நகரசபை முக்கிய அறிவுறுத்தல்!
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நான்கு பைகளில் தரம்பிரித்து வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் நகரசபையினால் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது . வவுனியா நகரில் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோண்றுகின்றது . இதனால் நகரசபைமேலும் படிக்க...
பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் – பொலிஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்மேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டி பேரணி: ஸ்ரீதரனிடம் மற்றுமொரு வாக்குமூலம் பதிவு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்றிருந்த மன்னார் பொலிஸார், வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மூன்றாம்மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நாடு திரும்பினால் தனிமைப்படுத்தல் இல்லை – சுகாதார அமைச்சு
வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்குவதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். வீட்டில்மேலும் படிக்க...
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது- கெஹெலிய
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை மாத்திரம் இதற்கான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
மத ஒற்றுமை குறித்து முன் வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் – மீனாக்ஷி கங்குலி
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள மனிதமேலும் படிக்க...
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடு – அரசாங்கம்
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டாலும் போராட்டம் தொடரும் – உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள உறவுகள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சிமேலும் படிக்க...
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்று படுவோம்- பேரணிக்கு அழைப்பு
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் விடுத்துள்ளமேலும் படிக்க...
போராட்டத்துக்கு அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற் படுவதாக உறவுகள் குற்றச்சாட்டு
சிவிலுடையில் வருகைதந்த பொலிஸார், தமது விபரங்களை பதிவு செய்ததுடன் தமது போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக மட்டக்களப்பில் நீதிகோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், 13வது நாளாகவும் இன்றும் (திங்கட்கிழமை) மட்டக்களப்புமேலும் படிக்க...
கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை அரசாங்கம் அனுமதிக்கப் போகின்றதா? – ஹர்ஷ டி சில்வா
கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்கப்போகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து’ – உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாகவும் தொடர்கிறது
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும்மேலும் படிக்க...
மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது- சி.வி.
மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்வி பதிலில், ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
யாழில் முன்னெடுக்கப் படவுள்ள பேரணிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்குக் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு ஆதரவளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கை அரசாட்சியாளரின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும், இவ்வாறானமேலும் படிக்க...
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம்
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- …
- 256
- மேலும் படிக்க