Main Menu

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்து பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவின் தலைவர், உறுப்பினர் சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதிக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தமது  உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மனுவில் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...