Main Menu

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

கொரோனா தொற்று சிகிச்சையின் போது தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அமைச்சர் தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சில வாரங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது செயற்கை சுவாசக் கருவியின் உதவியை எவ்வாறு பெற வேண்டும் என்பதை விளக்கினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் “நான் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடுகிறேன் என்று எனக்குத் தெரியும். எனது உடல்நிலை மோசமடைந்து வருவதை என்னால் காண முடிந்தது, மறுநாள் காலை வரை நான் அதை செய்யமாட்டேன் என உறுதியாக நம்பினேன்” என கூறினார்.

அத்தோடு தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்னணி ஊழியர்களுக்கு அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பகிரவும்...