இலங்கை
சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் போது மக்கள் சுகாதார வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர், நவீன்மேலும் படிக்க...
தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த
தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
அமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள
தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வில் இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால்மேலும் படிக்க...
திரை மறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்
பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க
இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் பிற நாடுகளும் பொருளாதாரத்மேலும் படிக்க...
பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்மேலும் படிக்க...
தீர்மானத்தை வழக்கம் போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது. மேலும் இந்த பிரேரணை அரசியல்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாக குறித்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒருமித்த கருத்து மூலம்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றுமேலும் படிக்க...
ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்றமேலும் படிக்க...
பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் களமேலும் படிக்க...
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.மேலும் படிக்க...
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்புமேலும் படிக்க...
ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன் சுட்டிக்காட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசிலமேலும் படிக்க...
இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நில அபகரிப்பு ஒரு இனப் படுகொலையாகவே பார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப்மேலும் படிக்க...
அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு
அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனமேலும் படிக்க...
புலிகளின் போராளிகள் குறித்து கவனம் கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர
விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களைமேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, ஐ.நா. மனிதமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- …
- 256
- மேலும் படிக்க