இலங்கை
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – சுகாதார அமைச்சு
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத்மேலும் படிக்க...
இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப் பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்!
கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறித்து இலங்கை கடும் அதிருப்தி
கடந்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்ததாக இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதில்களையும் இணைந்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ளமேலும் படிக்க...
உறவுகளை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது – திருமலை உறவுகள்
காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விஷேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸாரே, இன்று (திங்கட்கிழமை) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள்மேலும் படிக்க...
ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத் தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன் வைக்கும் – இரா.துரைரெத்தினம்
இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்குமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபைமேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைகளில் பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் வழங்கப் படுவதில்லை!
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை என பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுடன், இணைபங்குதாரராக “சேர்ச் போர் கொமன்மேலும் படிக்க...
7 வயதுச் சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் படுகாயம்- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனானமேலும் படிக்க...
சர்வதேசத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கி உள்ளது- ஸ்ரீதரன்
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில்மேலும் படிக்க...
மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டனர் – ஆனந்த சங்கரி
ஆன்மீக ரீதியில் செயற்படும் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்துவிட்டார்கள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
நயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்தவே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்தேன்- திலகராஜ்
எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் முன்னெடுக்கப் பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, பொலிஸார் மற்றும் வனவளத்மேலும் படிக்க...
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற் சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திருந்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்தியதுடன், நுண்கடன் தொடர்பான பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகமேலும் படிக்க...
இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா
பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன், முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் வழக்குகளுக்குப் போகாது இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் திகதியான இன்று (சனிக்கிழமை) முதல் சாகும் வரையானமேலும் படிக்க...
புரிந்துணர்வுகள், தெளிவு படுத்தல்கள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம்- யாழ். பல்கலையில் அஜித் நிவாட் கப்ரால்
புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம் என யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்.கலையில் கல்வி பயிலும் பதினொராயிரம் மாணவர்களில் நான்காயிரத்து 500 சிங்களமேலும் படிக்க...
இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறுமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- …
- 255
- மேலும் படிக்க