Day: July 19, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 263 (19/07/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரான்சில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் – 135 € தண்டப்பணம்
நாளை முதல் அனைத்து பொது இடங்களுக்கும் பயணிக்கும் போது முக்கவசம் அணிவது கட்டாயமாகும். ஜனாபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்த இந்த புதிய நடை முறை நாளை, ஜூலை 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது. இத்தகவலை சுகாதார அமைச்சர் Olivierமேலும் படிக்க...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் ஆரம்பம்
கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதில் மக்கள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது மீண்டும் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஊழல் விசாரணை இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் இன்றுமேலும் படிக்க...
கொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைத்தலைக் கைவிட்டனர்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வயதானோரை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். புகைபிடிப்போருக்கு கொவிட்-19மேலும் படிக்க...
முதல் தடவையாக ஒரே நாளில் கால் மில்லியன் தொற்றாளர்கள் பதிவு- உலக சுகாதார அமைப்பு
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஒரேநாளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின்மேலும் படிக்க...
அம்பாறை வாகன விபத்தில் நால்வர் காயம்!
அம்பாறையில் தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வேன் முற்றாகமேலும் படிக்க...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – மோடி கலந்து கொள்கிறார்
அயோத்தியில் வரும் ஓகஸ்ற் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு குறித்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமயத் துறவிகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாகமேலும் படிக்க...
தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தது தமிழ் மக்கள் பேரவை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன்மேலும் படிக்க...
அபராதத்துடன் தப்பித்த ஆர்ச்சர்: 3ஆவது போட்டிக்கு தடையில்லை
உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக 2ஆவது டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அபராதத்துடன் தப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் விளையாட்டரங்கிற்கு செல்லும் வழியில் தனது வீட்டுக்கு சென்று வந்த ஜோப்ராமேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியில் ரஷ்யாவில் வீதிக்கு இறங்கிய ஆயிரக் கணக்கான மக்கள் – ஆளுநரை விடுதலை செய்யக் கோரி போராட்டம்
ரஷ்யாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாகாண ஆளுநரை விடுதலை செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யாவின் ஹபர்ஸ்வோக் மாகாண ஆளுநராக செயற்பட்டு வரும் செர்ஜி ஃப்ர்ஜர், 2018ஆம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
காலினால் கழுத்தினை அழுத்திய பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்!
இங்கிலாந்தில் சந்தேக நபரை கைதுசெய்ய முயற்சித்தபோது அவரின் கழுத்தை காலால் நெரித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்ய முயற்சித்ததைப்போன்ற சம்பவமே இங்கிலாந்திலும் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸில் பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து!
பிரான்ஸில் நன்ற் (Nant) நகரில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த தீ, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்டதுடன்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6ஆம் கட்டமாக கடந்த முதலாம் திகதி முதல்மேலும் படிக்க...
அஸாமில் தொடரும் கடும் மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80ஆக உயர்வு
அஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது. அஸாமில் கடந்த இருவாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நதிகளிலும் வெள்ளநீர் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது. குறிப்பாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டமேலும் படிக்க...
சிறுபான்மையின மக்கள் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்
சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் தங்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம்மேலும் படிக்க...
ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்
ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்
தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டுமேலும் படிக்க...