Main Menu

அம்பாறை வாகன விபத்தில் நால்வர் காயம்!

அம்பாறையில் தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வேன் முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன்போது, வேனில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பகிரவும்...