Main Menu

தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் இரண்டாயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 85ஆயிரத்து 859 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக மூவாயிரத்து 725 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், நான்காயிரத்து 59 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 52 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...