Main Menu

“வாழ்க்கை ஒரு வரமே ” கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

வாழ்க்கை என்பது இறைவன் தந்த வரம்
இறைவனால் எழுதப்பட்ட கவியே வாழ்வு
வாழ்வது ஒரேயொரு முறை
வாழ்ந்து பார்ப்போம் வரைமுறையாய்
வாழ்வியல் பாதையோ கரடு முரடானது
கடந்து சென்றால் நிட்சயம் வெற்றியே !

வாழ்க்கை ஒரு வரம்
வாழ்வியல் அதில் ஓர் அதிகாரம்
வாழ்வாங்கு வாழுதலே அறம்
வாழ்வியலை நகர்த்த தாரம்
வாழ்வியலுக்குத் தேவை வாழ்வாதாரம் !

பாசம் நேசம் கோபம் தாங்கிய
அழகிய பூங்காவே வாழ்வு
கோபம் எல்லையை மீறிவிட்டால்
குடும்பமே குலைந்து விடும்
வரமாகக் கிடைத்த வாழ்வை
தரமாக வாழ்ந்திடுவோம் !

வாழ்க்கை என்பது பரந்தவானம்
சுட்டெரிக்கும் சூரியனும் வரும்
குளிர்ச்சி தரும் நிலாவும் வரும்
இரண்டையும் ஏற்றுக் கொண்டால்
இன்பமாகுமே வாழ்வு
வளமான வாழ்வே
வரமான வாழ்விற்கு சான்று !

ஜனனம் மரணம்
இரண்டிற்கும் இடையே
பாலமாய் இருப்பதே வாழ்வு
போர்க்களமாக்குவதும் புயலாக்குவதும்
எம்மையே சார்ந்தது
வரமாகக் கிடைத்த வாழ்வை
உரமாகப் பேணிடுவோம்
வாழ்வே வசந்தமாகும் !

பகிரவும்...