Main Menu

” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)

சோலைவனமாய் இருந்த செஞ்சோலை
பாலைவனமாகிய கொடியநாள்
செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள்
பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள்
குருதியில் உறைந்த கொடியநாள்
ஆவணித் திங்கள் பதினான்கு !

ஆதரவற்ற பள்ளிச் சிறுமிகள்
அமைதியாய் வாழ்ந்த இல்லம்
அலங்கோலமான அவலநாள்
அத்தனை உயிர்களும் அநியாயமாய்
அக்கினிக் குண்டிற்கு பலியாகிய
அனர்த்தநாள் ஆவணித் திங்கள்14 !

ஆண்டுகள் 13 ஓடியே போனாலும்
ஆற்ற முடியாத இரணமாய்
இன்னமும் எமக்குள்
எரிந்து கொண்டே இருக்கிறதே
பூத்துக் குலுங்கிய இல்லம்
முகாரியை இசைக்கிறதே !

செஞ்சோலைப் பூந்தளிர்களை
இன்றைய நாளிலே நினைவு கூர்ந்து
அஞ்சலிப் பூக்களை காணிக்கையாக்குவோம்
அமைதி வேண்டி பிரார்த்தனை செய்வோம்
அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடையட்டும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...