Main Menu

சர்வதேச பெண்கள் தின சிறப்புக்கவி

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
சிறைப்பட்டது போதும்
சீக்கிரமாய் புறப்பட்டு விடு
சிகரத்தைத் தொட்டு விட
வீட்டுச் சிறையை உடைத்தெறி
விண்ணை எட்டப் புறப்படு
எழிற்சி கொண்டு ஏற்றம் பெற்றிட
எழுந்துநில் உயர்ந்துசெல் பெண்ணே !

வானம் கூட வசப்படும் ஓர்நாள்
வாழ்வும் வளம் பெறும் உன்னால்
வானம் உனக்கு தூரமில்லை
நிலவை முட்டி வானில் ஏறு
சாதனை செய்து சரித்திரம் படை
பெண்ணே எழுந்து நில் உயர்ந்துசெல் !

மண்ணுலகின் மலரே
கண்ணுக்கு விருந்தானவள் நீ
கருத்திற்கு உரமானவள் நீ
இதயத்திற்கு இதமானவள் நீ
இன்பத்தின் சொர்க்கம் நீ
பார்வையால் சாதிப்பவள் நீ
பரிவினால் அணைப்பவளும் நீயே
பாவையே புதுமைகளைச் செய்து
புரட்சிப் பெண்ணாய் வாழ்ந்திடு !

ஆளப் பிறந்தவளே அழகோவியமே
விடியலைத் தேட விரைந்தெழு
விண்மீனாய் ஒளிர்ந்திடு
நிஜம் அறி புரட்சி செய்
துணிவோடு போராடு
வெற்றி நிட்சயம்
வீறு கொண்டு எழுந்து நில்
விந்தைகள் செய்து உயர்ந்து செல் !

-ரஜனி அன்ரன் (B.A) 08,03,2019

பகிரவும்...