உலகம்
மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு
மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரபட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அந்நாட்டு இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.மேலும் படிக்க...
பெல்ஜியத்தில் பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு !
பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும் இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா. பொதுச் செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்
போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார்.மேலும் படிக்க...
புதிய வகை உருமாற்ற கொரோனா கண்டு பிடிப்பு – லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவுகிறது
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும்மேலும் படிக்க...
ஒலிம்பிக் தொடருக்காக ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்: ஜப்பான்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர், தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், ஜூலை 11ஆம் திகதிவரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்தமேலும் படிக்க...
மே மாதத்தில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிவு!
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிந்ததாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. சுப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்குவதற்கு பதிலாக, மீண்டும் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களை மக்கள் தேர்வு செய்ததே இந்தமேலும் படிக்க...
ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது!
சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும்மேலும் படிக்க...
வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்!
வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் உணவு நிலைமை குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளி விபரங்களுக்கான அலுவலகம்!
வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.7 சதவீதமாக இருந்தது. இது முன்னர் 4.8 சதவீதமாகமேலும் படிக்க...
தலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்!
தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை, தற்போது நடைபெற்று வருகிறது. இராணுவ சதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களைமேலும் படிக்க...
இஸ்ரேலின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலின் புதிய பிரதமர்மேலும் படிக்க...
ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்
சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3மேலும் படிக்க...
மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பாகவே அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறித்த தீ விபத்து காரணமாகமேலும் படிக்க...
ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்
மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படால் அவரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்றுமேலும் படிக்க...
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்: 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக தகவல்!
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். இந்நிலமை குறித்து ஐ.நா. ஆதரவுடைய பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க் லோகாக் கூறுகையில், ‘இப்போது பஞ்சம் உள்ளது. இது மிகவும் மோசமாகிவிடும்’ எனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்
பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ்மேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில் 12பேர் உயிரிழப்பு!
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது எஃகு ஆலையில் இருந்து சுமார்மேலும் படிக்க...
இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்
இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகும் ஒப்பந்தத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்மேலும் படிக்க...
உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் தேவை இல்லை – இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- …
- 121
- மேலும் படிக்க