Main Menu

ஒலிம்பிக் தொடருக்காக ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்: ஜப்பான்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர், தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், ஜூலை 11ஆம் திகதிவரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர்.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவசரநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களை தொலைக்காட்சியில் போட்டிகளை கண்டு களிக்குமாறு அந்நாட்டு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக், எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பாரா ஒலிம்பிக், ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்...