உலகம்
ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு?
ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக சாதனை அளவை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளுக்கான வருடாந்திர புள்ளிவிபரங்கள், வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.இதில் அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
துனிசியா பிரதமர் பதவி நீக்கம் – பாராளுமன்றம் கலைப்பு
கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டில் துனிசியா நாட்டின் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 5.69 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
முழுமையாக தடுப்பூசி செலுத்திய ஐரோப்பிய ஒன்றிய- அமெரிக்க மக்களை வரவேற்க வலியுறுத்தல்!
மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லையைத் திறக்க, ஹீத்ரோ விமான நிலையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றுவரை கிட்டத்தட்ட 3 பில்லியன் பவுண்டுகள், கொரோனா வைரஸ் நெருக்கடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்புமேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய கும்பல், 121மேலும் படிக்க...
100 கி.மீ வேககத்தில் சீனாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கிய சூறாவளி
ஷாங்காய்க்கு தெற்கே சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 100 கி.மீ வேககத்தில் சூறாவளி தாக்கியது. கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் விமானங்களும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டது. இதேவேளை 250-350 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும்மேலும் படிக்க...
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் உயிரிழப்பு
நாட்டின் வடக்கே உள்ள இராணுவ புறக்காவல் நிலையத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்த இந்த தாக்குதல் அண்மைய மாதங்களில் வடக்கு கமரூனில் இடம்பெற்ற தாக்குதலில் மிகக் கொடூரமானது என்றும்மேலும் படிக்க...
வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா
அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ்மேலும் படிக்க...
12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஒப்புதல்!
அமெரிக்காவின் மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில்மேலும் படிக்க...
மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!
மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்குள் நீர்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்கில் கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு!
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்துமேலும் படிக்க...
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!
அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுமேலும் படிக்க...
லெபனானிலிருந்து இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது. இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்குமேலும் படிக்க...
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் அல்-ஆதா பண்டிகைக்கு முன்னதாக நேற்று (திங்கட்கிழமை) வடக்கு சதர் நகரில் உள்ள வஹைலத் சந்தையில், இந்த தற்கொலைக்மேலும் படிக்க...
ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு
மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டும் சுமார் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத்மேலும் படிக்க...
ஃபைஸர்- மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும்!
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவமேலும் படிக்க...
விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றி!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், வி.எம்.எஸ். ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது. இதில், விர்ஜின்மேலும் படிக்க...
வடகொரியா- சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் விருப்பம்!
வடகொரியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான 60ஆம் ஆண்டையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு வடகொரியா, சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்மேலும் படிக்க...
எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !
எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410 இடங்களை வென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புமேலும் படிக்க...
வெனிசுவேலா: பொலிஸாருக்கும் கும்பலுக்கும் இடையிலான மோதலில் 26 பேர் உயிரிழப்பு
வெனிசுவேலாவில் வடமேற்கு பகுதியில் பொலிஸாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையிலான மோதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுவேலா உள்துறை அமைச்சர் கார்மென் மெலண்டெஸ் தெரிவித்தார். தலைநகர் கராகஸில் இரண்டு நாட்களில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- …
- 121
- மேலும் படிக்க