இந்தியா
கொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ சென்னையில்மேலும் படிக்க...
நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி
இந்தியாவில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பிரநிதிநிதிகளுடன் காணொளி காட்சிமேலும் படிக்க...
சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளைமேலும் படிக்க...
பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்
பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை எனத்தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொது முடக்கம் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை – கிண்டியில் அமைக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவமனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தமேலும் படிக்க...
திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை!
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சக தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமிமேலும் படிக்க...
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்
சாத்தான்குளத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது. சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் பொலிஸாரின் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று திங்கட்கிழமை ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்மேலும் படிக்க...
எல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பின்வாங்கி வருகிறது. சீன ராணுவப் படைகள் கண்காணிப்பு மையம் 14 ல் இருந்து கூடாரங்களையும், கட்டமைப்புகளையும் அகற்றி வருவதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதால் அரச அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. இது குறித்து நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஜுலை 31 ஆம் திகதிவரை தளர்வுகளுடன் கூடியமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 71 பகுதிகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தை தீவிரமாக அமுல்படுத்தும் வகையிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 இலட்சம் பொலிஸார பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமானமேலும் படிக்க...
கொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த கொடிய வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 312 ஆக பதிவாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம்மேலும் படிக்க...
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒருமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் 30ஆம் திகதி சென்னையில் 2,393 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதே நாளில், டெல்லியில் 2,199 பேருக்குத்தான் தொற்றுமேலும் படிக்க...
இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியும் – ரவிசங்கர் பிரசாத்
இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியுமென மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தின் எதிரொலியாக சீனாவிலிருந்து செயற்படும் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதுகுறித்துமேலும் படிக்க...
சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – ரஜினி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குமேலும் படிக்க...
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது
சாத்தான்குளம் வழக்கில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.மேலும் படிக்க...
தந்தை, மகன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி இன்றே விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேதமேலும் படிக்க...
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
தொலைபேசி மற்றும் ஏனைய மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியே மத்திய அரசு இந்த நடவடிக்கையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- …
- 137
- மேலும் படிக்க