Main Menu

கொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு!

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக  71 பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

இதனையடுத்து தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி,  ஆக்ரா கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் இப்போது திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களும் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...