Main Menu

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது

சாத்தான்குளம் வழக்கில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சி.பி.சி.ஐ.டி. பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...