Main Menu

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – ரஜினி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...