இந்தியா
பாரதத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன், பாரதத்தின் 17ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். இன்று மாலை 7 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகிய ராஷ்ட்ரபதி பவனில் பதவியேற்பு விழா இடம்பெற்றது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில்மேலும் படிக்க...
ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!
சட்டசபை தேர்தலில் பெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அம்மாநிலத்தின் ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். மக்களவைமேலும் படிக்க...
மோடி மந்திரி சபையில் தமிழகத்தில் 2 பேருக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.மேலும் படிக்க...
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை – பினராயி விஜயன்
தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒருமேலும் படிக்க...
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி பிரமாணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில்மேலும் படிக்க...
உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியினை வழங்குமாறு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் 13 வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர்மேலும் படிக்க...
மோடி பதவியேற்பு விழாவை மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் புறக்கணிப்பு
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். இதேபோல் பினராயி விஜயனும் விழாவை புறக்கணித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302மேலும் படிக்க...
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்பு ?
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில்மேலும் படிக்க...
ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்றார்
சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கமேலும் படிக்க...
சசிகலா மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் பெங்களூரு சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான வழக்கு விசாரணையை ஜூலை 16ஆம் திகதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அவர்மீது தொடரப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வழக்கில் ஜெ.ஜெ. ரிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச்மேலும் படிக்க...
கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை- தமிழிசை பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்
20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில்மேலும் படிக்க...
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் – நாராயணசாமி
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததுமேலும் படிக்க...
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்றுமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் – சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம்மேலும் படிக்க...
ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை
முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார். கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர்மேலும் படிக்க...
காங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம்மேலும் படிக்க...
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- …
- 137
- மேலும் படிக்க