Main Menu

ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!

சட்டசபை தேர்தலில் பெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தின்  முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில்,  அம்மாநிலத்தின் ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மக்களவை தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் Y.S.R காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...