Main Menu

கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.

எனினும் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் நிலைமை மீண்டும் மோசமடையக் கூடும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...