Main Menu

புலிகளின் போராளிகள் குறித்து கவனம் கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “30 வருடகால சிவில் யுத்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் மேற்குலகம் கவனம் செலுத்துவதாகவும் அவர் சாடினார்.

மேலும் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தவிர்த்து ஏனைய மாகாணங்களில் புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி மக்கள் குறித்து கவனம்கொள்ளாதது கவலைக்குரியது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எந்த நாடுகளையும் பகைத்துக்கொள்ளாமல் ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும் எனவும் அவர் தெரிவித்தார்.

தீரமானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்களை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியலமைப்பிற்கு உட்படுத்தி உள்ளக பொறிமுறை ஊடாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பகிரவும்...