இலங்கை
மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சி அடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது – மனோ
மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சியடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின்மேலும் படிக்க...
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப் படுகின்றது – நாமல்!
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டு மக்கள் அனைவரிற்கும் நியாயமான விலையில்மேலும் படிக்க...
திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த திருமதி உலக அழகிக்கு 10- 20ஆண்டுகள் சிறைத் தண்டனை!- சட்டத்தரணி
2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியின் வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை, அவரது தலையில் இருந்து வலுக்கட்டாயமாக திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பறித்ததாக உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 10- 20 வருடகால சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்கமேலும் படிக்க...
மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதேமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பயனற்றது என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்- ரோஹித ராஜபக்ஷ
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பயனற்றது என்று மக்கள் தற்போது குற்றம் சாட்டுகிறார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாண்டுவஸ்னுவர குடிநீர் திட்டத்திற்கு ரோஹிதா ராஜபக்ஷ நேற்று (புதன்கிழமை) அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
சரத் பொன்சேகாவிற்கு சவால் விடுத்த சமல்!
நாடாளுமன்றத்தில் இன்று காலை(வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தினாலேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.மேலும் படிக்க...
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம்மேலும் படிக்க...
பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்
அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு
வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது உறவுகளை தேடி அவர்களை கண்டுப்பிடிக்காமலேயே உயிரிழந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் இருக்கின்றார்களா?மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல
ஈஸ்டர் தாக்குதலுக்கு நௌபர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப் பட்டதில்லை – பீரிஸ்
விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும்மேலும் படிக்க...
யாழ். நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி!
யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு
இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் 2020/21ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர், நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன்மேலும் படிக்க...
சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு
பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்மேலும் படிக்க...
தமிழர்கள் கொல்லப் பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி
இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக நஃபர் மௌலவி அடையாளம்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார். உளவுத்துறைமேலும் படிக்க...
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார்மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், சுகாதார அமைச்சுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்மேலும் படிக்க...
பொதுமக்கள் பொறுப்பு அற்றவர்களாக இருக்கக் கூடாது – அமைச்சர் கெஹலிய
புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய அளவிலான விழாக்களை நடத்த அனுமதித்துள்ளன என்றும் கூறினார். இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- …
- 257
- மேலும் படிக்க