Main Menu

ராஜித வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே!- உதய கம்மன்பில

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர்  அவர் மறைந்து இருந்த விதம் மற்றும் முன்பிணை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த விதம் என்பவற்றை கவனத்திற் கொள்ளும் போது அவர் சிங்கப்பூர் பயணித்தால் திரும்பி வருவார் என்று உறுதியாக கூற முடியாது.

மேலும்  இதற்கு முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த அவர், தனக்கு அரசாங்க வைத்தியசாலைகள் மீது நம்பிக்கை இல்லாமல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

அத்துடன் இலங்கையில் மருத்துவம் செய்ய முடியாதென கூறி  சிங்கபூரிற்கு செல்வதாக அவர் தெரிவிப்பாராயின் வைத்தியதுறை தொடர்பாக யாருக்கு நம்பிக்கை இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...