Main Menu

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் வழுரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.

வந்தவாசி ஒன்றியத்தில்  நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வழுர் கிராமத்தில், வாக்காளர்களுக்கு புடவைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வுக்காக சென்றுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும், புடவை வினியோகம் செய்து கொண்டிருந்த 5 பேர், சுமார் நூறு பாலிஸ்டர் புடவைகளை சாலையிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து புடவைகளை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பகிரவும்...